Image by Gerd Altmann from Pixabay

என் அன்புக் காதலியே
கடந்து வந்த ஞாபகங்களை
எழுதித் தீர்க்க முடியாத
நினைவாக…!!
உள்ளத்தில் இடம் பிடித்த
நீ என் கவிதை சுனையில்
கலந்திட வருவாயா….!
கோலமயிலாடும் அழகியே….!

காலையில் உதிக்கும் சூரியனின்
ஒளி கண்ணிற் படும் முன்
கைப்பேசியில் நின்னைக்
கண்டு ரசித்தேனடி...!
இரவுத் தூக்கத்தைக் கலக்கும்
மாயக்காரியே என்றும்
நின்னை நினைத்து வாடும்
பாலைவனக்
காதலனானேடி...!
பார்க்க வேண்டும் இவளின்
வெண்முகப் பசலைக்
கன்று மேனியைக்
கொண்ட பாவையே...!
தான் கண்டத் தோல்விக்கு
முற்றுப்புள்ளி தன் வாழ்வு
மேன்மை அடைய
இணைந்து இனிமைத்
தருவாயா...!
நம் தாய் நாட்டில்
எங்கும் வீசும்
இளந்தென்றலே...!

வாழ்க்கையின் கற்பனைக் கவிதை
(தலைவிப் பற்றிய சில வரிகள்)
பூஞ்சோலைப்
பூமியில் தென்றல்
உயிர்வளியோடு
வருகையில் அவள்
இடையில் கமழும்
நறுமணத்தில்
வாழ்ந்தேனே...!
தமிழினம் காக்கும்
கங்கையே உந்தன்
நெற்றியில் குங்குமம்
இட்டு முத்தமிட
வேண்டும்
ஒர் நாழிகை
வாழ்த்திடவே...!

.    .    .

Discus