Image by Kang-Rui LENG from Pixabay

வெற்றிடமாய் இருந்த
இதயத்தில் மலர்ந்த
அத்திப்பூ தேனே...!
எந்தன் மூச்சுக்காற்றில்
கலந்து விட்டுக் காக்க
வைக்கும்பெண்ணே...!
தோற்றத்தின் அழகு
பொய்யடி….!
அன்புநெறி நிறைந்தப்
மனிதனின் அழகு
மிகையாகாது எவ்விதத்திலும்
கார்மேகமே...!
புகைப்படத்தில் மலர்ந்தத்
தாமரையே உன்னைக்
அழியாமல் காக்கும்
திரளானவன் நானடி....!
கானல் நீர் போல் ஒளிரும்
இடையளே நின்னைக்
கண்டதும் மனத்தில்
பதிய வைத்து கவிதைகள்
வடித்தேன் புதிதாக ...!
எந்தன் வாழ்விற்கு இடம்
கொடுக்க வருவாயோ..!
மருத நிலத்தின் பெண்ணே..!
செயலற்றுக் கிடந்த உடல்
உன்னால் உயிர்ப்பெற்றது
எழுந்தது...!
அன்பைச் செழிக்க
வைத்ததுப்
பூமியில்....!

.    .    .

Discus