Image by Gerd Altmann from Pixabay

காற்றில் கலந்து வரும்
தேன் மணத்திற்கு தமிழ்மரபில்
சுவாசம் உண்டு...!
நின்னை நினைத்துக் கவிதை
எழுதுகையில் இந்த வையம்
புகழ சொற்களை எடுக்க
மனமில்லை...!
அவைகள் எல்லாம்
உந்தன் தேகத்தில்
வரிகளாய் மிளர்குறதே
யான் செய்வன்‌ நான் ...!
கவிஞன் எழுத்திற்கு
இடமில்லை அவளிடம்
உயிரில் கலந்திட
காதலும் இல்லை
காலம் கடந்துவிட்டதே...!
ஐயனே...!
காதல் சொல்லும் கண்கள்
கவிதைச் சொல்லும் விழிகள்
கற்கண்டு சுவைக் கொண்ட
கன்னங்கள்….!
கானகம் நிறக் கொண்ட மயிரிழை
காற்றில் அசைந்தாடும் கூந்தல்கள்
காது மடல்களில் ஒளிரும் பளிங்குகள்
கவர்ந்து ஈர்க்கும் அழகிய
மெய்கள் ….!
கதிரொளிக் குவியும் உள்ளங்கைகள்
கட்டுத்தேக வளைந்த மெல்லிடைகள்
கவின்மிகு முத்தமிட தோன்றும்
கழுத்துகள்….?
கடலலை வீசும்
மெல்லிடைகள் கொண்ட
உள்ளத்தில் மீண்டும்
எப்படித்தான் அன்புக்
கொள்ளுவனோ...!
உயிரில் கலந்த இன்னிசையே...!

.    .    .

Discus