Image by Παῦλος from Pixabay

பொன்நிலவு வெள்ளிச்சிலையே...!
காலந்தோறும் எங்கும்
மணக்கும் மடப்பிடியே...!
தோன்றி மறையும் வானவில்
அழகின் கொடிமுல்லை
மலர்களின் நறுமணம்
கமழும் சந்தன மகளே...!
பண்ணிசைப் பாடலின்
முகவரியே உனை
நினைத்தால் போதும்
புதுமைகள் மலரும்
பூமிச் செழிக்கும்...!
உனது அன்புக்கவிதைகளின்
வரிகள் கண்ணதாசனின்
தென்றலில் தோன்றிட
விரும்பும் நன்செய்
நிலம் பெற்றெடுத்த
தாயுள்ளம் கொண்டவளே.....!
பூமியில் மழையாக
பொழிவாயா வேளாண்மைச்
செழிக்கப் புன்னகைக்
கன்னியே......!

.    .    .

Discus