Image by Pete Linforth from Pixabay 

அர்ப்பணிப்பு என்ற வார்த்தை கடவுளுக்காக மட்டும் இல்லை;

குழந்தைகளுக்காகவும் தான்;

ஒரு தாய் தன் பிள்ளையை கருவில் சுமக்க ஆரம்பித்த கணத்தில் இருந்து

தன் வாழ்நாள் முடியும் வரை அதற்காகவே தன்னை முழுவதும் அவள் அர்ப்பணிக்கிறாள்;

கருவறையில் இருந்து கல்லறை வரை;

கடவுளுக்கு நிகராக தன் குழந்தையை பாவிக்கிறாள்;

தன் குழந்தையின் நலனுக்காக அந்த கடவுளிடமே சண்டையிடுகிறாள்;

கடவுளின் அருள் தன் குழந்தைகளுக்கு பரிபூரணமாகக் கிடைக்க தன்னையே காணிக்கை ஆக்குகிறாள்;

பிள்ளையின் பாசத்துக்காக பரிதவிக்கிறாள், அன்பிற்காக ஏங்குகிறாள்;

பிஞ்சு கைவிரல் தொட்டு பார்த்து பூரிப்பு அடைகிறாள்;

தன் வாழ்க்கை முடிவடைந்ததாக தன் பிரவிப்பலனை அடைந்ததாக உணர்கிறாள்;

தங்கை தமக்கை தாரம் மகள் என்று எத்தனை பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காத பேரின்பம் தாய் என்று கூறியதும் வரும் அதிசயம் என்ன??

ஒரு தாயாக இதில் பெருமிதம் கொண்டு என் போன்ற தாய்மார்களுக்கும் இப்படைப்பைச் சமர்ப்பிக்கிறேன்.

.   .   .

Discus